பாலிகா பஞ்சாயத்து தேர்தல்


தேதி: 15/09/2023. இடம் :குருவம்மாபேட்டை.
தொகுப்பாளர்: திருநாவுக்கரசு வார்டு உறுப்பினர்
பங்கேற்பாளர்கள்: திவ்யா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், மனநல ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.
தேர்தல் அலுவலர்; சங்கமித்திரை சமூக சேவகர் அவர்கள்
இன்று குருவம்மா பேட்டை பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர்.

தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.

66 குழந்தைகள் வாக்களித்தனர்.

இதில் ஆண்கள் 17 பெண்கள் வந்து 49 பேர் என வாக்களித்தனர்.

தேர்தல் முடிவுகள் 20/09/2023 அன்று ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக ஓட்டு அளித்தனர்.

Leave a comment