தேதி: 20/09/2023. இடம் : பெரமண்டூர்
தொகுப்பாளர்: முருகன் ஆசிரியர்
பங்கேற்பாளர்கள்: ரஞ்சினி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்.
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.
தேர்தல் அலுவலர்; மரியசெல்வி தலைமை ஆசிரியை
இன்று பெரமண்டூர் பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். அனைத்து குழந்தைகளும் ஆர்வமாக ஓட்டு அளித்தனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். 50 குழந்தைகள் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 18 பெண்கள் 32 பேர் என வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் 25/09/2023 அன்று ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.




Leave a comment