பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வள ஆதார வரைபட நிகழ்ச்சி

இடம். Thaiyur கிராமம் நாள் 17. 11 .2023

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள். 15 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி கமலவேணி அவர்கள். மற்றும் சிறுவர்கள்.22

இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கிராமத்தின் அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வண்ணக்கோளமாவு பயன்படுத்தி வரைபடமாக வரைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் எவை என்பதையும் பாதுகாப்பற்ற இடம் எவை என்பதையும் குழந்தைகள் பொதுமக்களுக்கும் புரிகின்ற வகையில் உறுப்பினர்கள் வட்டமிட்டு காட்டினர்.

இதில் 3 முக்கிய பிரச்சனைகளாக முன்வைத்தனர்

தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் .

தெருக்களில் கழிவு நீர் தேங்கி நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவே அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்

வீடுகளில் தனிநபர் கழிவறை அமைத்தல். போன்றவைகளை முக்கிய பிரச்சனைகளை அனைவருக்கும் புரிகின்ற விதமாகவும் அத்தியாவசிய தேவையாகவும் உள்ளன என்று உணர வைக்கின்ற நிகழ்வாக அமைந்திருந்தது .

நிகழ்ச்சியின் இறுதியாக மேற்கண்ட பிரச்சினைகளை விரைவாக நிவர்த்தி செய்யக் கோரி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி கமலவேணி என்பவரிடம் மனுவாக எழுதி கொடுக்கப்பட்டது . மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் நான் தலைவரிடம் சொல்லி விரைவாக சரி செய்யும் பணிகளை மேற்கொள்வேன் என்று உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்தார். மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு. ஜான்போஸ்கோ. ஒருங்கிணைப்பாளர் . பெண்கள் கண்ணிய மையம் . செஞ்சி .மற்றும் தன்னார்வலர்கள். திருமதி ஜெயந்தி.
ஆகியோர் செய்திருந்தனர் நன்றி.

Leave a comment