பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்.

இடம் .பெரப்பந்தாங்கள் கிராமம்.  நாள் நாள் 24/01/24

திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். திரு.முருகன். ஆசிரியர் செல்வி. விஜயலட்சுமி.
கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள :.19
பெரப்பந்தாங்கள். கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்..முதலில் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்குழந்தை களுக்கும்
வாழ்த்துகள் கூறப்பட்டது.
கடந்த மாதம் சிங்கனூரில். நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது குழந்தைகளை தங்களின் கிராமத்தில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.
அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி இந்த மாதம் 26 ந்தேதி நடக்க இருக்கும் கிராம சபாகூட்டத்தில் மணு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது
.குழந்தைகளுக்கு ஞாபக திறன் மேம்படுத்துவதற்கு
குழு விளையாட்டு மூலமாக அறமுக படுத்தப் பட்டது.
அனைத்து குழந்தைகளுக்கும் இந்த இல்லம் தேடி கல்வி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்பவர்களுக்கு இறுதி தேர்வு மார்ச் மாதம் நடைபெறுவதால்.குழந்தைகள் படிக்க வேண்டுமெனவும் அனைவரும் இந்த மாலை நடக்கும் வகுப்பிற்கு கட்டாயமாக வர வேண்டு்ம் என ஆசிரியர் திரு. முருகன் கேட்டுக்கொண்டார். அனைத்து குழந்தைகளும் ஒற்றுமையாகவும், ஒழுக்க மாகவும் ,பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென
கேட்டுக் கொள்ளப்பட்டது..குழந்தைகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மன நல ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை நம் அலுவலக மூலமாக வழங்கப்படும்.இதனால் அந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டுழுவலாம் என்று கூறப்பட்டது.

Leave a comment