நாள்: 28.02.2023 இடம் : கொண்டங்கி
28.02.2024 அன்று பாலிகா பஞ்சாயத்து கூட்டம் கொண்டங்கி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தன்னார்வலர் திருமிகு அர்ச்சனா அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள், அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே பெண்கள் குழந்தைகள் சார்ந்து செயல்படும் அலுவலகம் பற்றி கேட்டறிந்தோம். அதற்கு உறுப்பினர்கள் தெரியாது என்று பதில் அளித்தார்கள். இதில் சில உறுப்பினர்கள் குழந்தைகளுக்கான அவசர எண் 1098 என்ற எண்ணை தெரிவித்தார்கள். மேலும் இன்றைய கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்காக இயங்கும் அலுவலகம் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இயங்கிவருகிறது. இவ்வமைப்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கிவருகிறது. இச்சேவை மையம் 24 மணிநேரம் செயல்படும் மையம் ஆகும். அவசரகால அழைப்பு எண் 181, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள், குழந்தை திருமணம் போன்ற தகவல்களை தெரிவிக்கலாம்.
அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) விழுப்புரம், பாண்டிச்சேரி ரோடு மாதா கோவில் அருகே இயங்கிவருகிறது. இங்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPO) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே செயல்படுகிறது.அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் நமது மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கண்டமங்கலம் ஆகிய படங்களில் பெண்கள் &பெண்குழந்தைகளுக்கு ஆதர்வாகவும், அவர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
#european_union #eu_projects @karunadeutschland #balika_panchayat #villupuramofficial #adolesent #awareness #stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa # #EU #EUIndiaEkSaath #EUGenderChampion #EUGender #GenderEquality @Eu_in_India #ADECOMN





Leave a comment